ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மீன் பிடிக்கும்போது மின்னல் தாக்கி இருவர் மரணம்

ட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கோ.கிருஸ்ணரூபன் (வயது 26), இ.புலேந்திரன் (வயது 35) ஆகிய இருவருமே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இவர்களின் சடலம் கிராம சேவகரின் அனுமதியுடன் உறவினர்களினால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு பொலிசாரின் உதவியுடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது. மநி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -