முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பான பைல்கள் தன்னிடம் இருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தனியார் தொலைக்காட்சியொன்றின் சலகுண எனும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு அவரது தம்பிகளான கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அஅதனைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் என் போன்றவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு என்னைத் தொந்தரவுபடுத்தினால் மஹிந்த அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பாக என்னிடம் இருக்கும் பைல்களை வெளியிடுவேன் என்றும் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.