மஹிந்தவின் ஊழல்கள் தொடர்பான பைல்கள் என்னிடம் உள்ளது -எச்சரிக்கும் மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பான பைல்கள் தன்னிடம் இருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தனியார் தொலைக்காட்சியொன்றின் சலகுண எனும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு அவரது தம்பிகளான கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அஅதனைப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் என் போன்றவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு என்னைத் தொந்தரவுபடுத்தினால் மஹிந்த அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பாக என்னிடம் இருக்கும் பைல்களை வெளியிடுவேன் என்றும் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -