கொத்மலை மண்சரிவில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்.!

க.கிஷாந்தன்-
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25.09.2015 அன்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியான ஏழு பேரின் சடலங்கள் 27.09.2015 அன்று பெருந்திரளான மக்களின் கண்ணீர் கதறலுடன் தோட்டமே முழு சோகமயமாக காணப்பட்ட நிலையில் இறந்தவர்களின் சடலங்கள் தோட்ட வாசிகசாலையிலிருந்து பிற்பகல் 3.20க்கு எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 4.15 மணியளவில் பொது மயானத்தில் கடும் மழையில் மத வழிபாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அத்தோடு இறுதி கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்திருந்ததோடு உறவுகளை பரிகொடுத்து விட்டோம் என கதறி அழுததையும் தலையில் அடித்துக்கொண்டு மரண சடங்களில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இறுதி சடங்கினை முறையாக செய்வதற்கு இத்தோட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் நேரங்காலம் பாராமல் ஈடுப்பட்டனர்.

காலநிலை கூட மந்த நிலையில் காணப்பட்டதோடு ஆங்காங்கே வெள்ளை கொடிகளும் பெணர்களும் போடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

அத்தோடு மரண சடங்களில் அதிகபடியான மக்கள் கலந்து கொண்டிருந்தமையால் மக்களை கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் காணப்பட்டுள்ளதோடு இத்தோட்டத்தில் அதிகபடியான வாகனங்கள் வருகை தந்தமையால் போக்குவரத்தில் செய்வதில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதமானதோடு வாகனங்ளை ஒதுக்குவதற்காக கொத்மலை பொலிஸாரும் ஈடுப்பட்டனர்.

ஏற்பட்ட மண்சிரிவில் சிக்குண்டு பரிதாபமான நிலையில் லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), அருண் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

25.09.2015 அன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் 9 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன.

9 வீடுகளில் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாராங் கற்களுடன் கூடிய மண்மேடு, வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்துள்ளது.

மண்சரிவு அபாயத்தினால் குறித்த பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் இடம்பெயர்ந்து 26.09.2015 அன்று இறம்பொடை இந்து கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர். எனினும் இதில் 17 குடும்பங்களை சேர்ந்தவர்களை குறித்த தோட்டத்தின் காலாசார மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகள் முன்னெடுத்து வருகின்றன.

அத்தோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு சரிந்துவிழும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்த முனாமைத்துவ அதிகாரிகளால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இணங்கண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி திகாம்பரம் 26.09.2015 அன்று நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் அனுதாபங்ளை செய்ததோடு பாதிக்கப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்காக புதிய 17 வீடுகளை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அந்த குடும்பங்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் அவர் உரிய பணிப்புரைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகளை கட்டி தருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு 27.09.2015 அன்று பிற்பகல் மரண சடங்குக்கு வருகை தந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பிரத்தியோக செயலாளர் திஸ்ஸ குமார மற்றும் கொத்மலை இணைப்பாளர் ஜெயரட்ண ஏவகே தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களிடம் தலா 25000 ரூபா படி 175000 ரூபா காசு வழங்கப்பட்டது.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -