பைஷல் இஸ்மாயில் –
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் பிரதேச சிறுவர்பாதுகாப்புப் பிரிவின் அனுசரணையுடனும் 'பிள்ளைகளை உயிர்போல் காப்போம்' என்ற தொனிப்பொருளில் சிறுவர்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை (30) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் யூ.எல்.எம்.சபீர் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் எம்.எம்.நாஸர் அலி, உபசெயலாளர் எம்.சாஜின், அமைப்பாளர் எம்.எஸ்.ஜெனீஸ் மற்றும் எம்.எம்.சித்தி நாழிறா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பிலும், போதைப்பொருள் பாவனைமற்றும் சமூக விரோதச் செயற்பாடுககளிலிருந்து அவர்களை தடுப்பதற்கான செயற்பாடுகள் பற்றிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுட்டப்பட்டது.







