மதுபானத்தில் கலப்படம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

 க.கிஷாந்தன்-

லையகத்தில் காணப்டும் மதுபானசாலைகளில் பொதுவாக விலை குறைந்த மற்றும் தரம் குறைந்த மதுபானங்களே விற்பனை செய்து வரப்படுகின்றன. அவற்றிலும் கலப்படங்கள் காணப்படுவதாகவும் தெரிய வருகின்றன. இதனையே தோட்ட மக்கள் பாவித்து வருகின்றனர். இதனால் தோட்ட சமூகம் பல சமூக சீர்கேடுகளுக்கு உள்ளாகி வருவது யாவரும் அறிந்த விடயம்.

இவ்வாறான நிலையில் இறம்பொடை தவலங்தன்ன பிரதேச மதுபான கடையொன்றில் கொள்வனவு செய்த மதுபான போத்தலில் எறும்புக்கள், பூச்சிக்கள் காணப்படுவதை கொள்வனவவு செய்தவரினால் கண்டுப்பிடிக்கப்பட்டு கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தபட்டவரிடம் வினாவியபோது,

தான் வழமையாக தனது தேவைக்கு குறித்த மதுபானசாலையில் கொள்வனவு செய்வேன். அவ்வாறு கொள்வனவு செய்த வேலையில் எறும்புக்கள், பூச்சிக்கள் மற்றும் துகள்கள் காணபடுவதை கண்டேன் பின் குறித்த மதுபானசாலைக்கும் மது உற்பத்தி நிறுவனத்திற்கும் அறிவித்தேன் எந்த பலனும் இல்லை. 

குறித்த நிறுவனமோ 03 போத்தல் மதுபானம் தருவதாக கூறி இந்த பிரச்சனையை கை விடுமாறு கூறினர். அதை பொருட்படுத்தாது மக்களின் நலன் கருதி பொலிஸாரிடம் முறையிட்டதாக கூறினார். மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -