பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான செயலமர்வு...!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

ஆசியா மன்றம்,கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) ஆகியன இணைந்து சமூதாய பொலிஸ் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கந்தளாய் பிரதேசத்திற்குட்பட்ட கந்தளாய் தலைமை பொலிஸ், தம்பலகாமம், சேருநுவர, அக்போபுர, சூரியபுர ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான செயலமர்வொன்றினை 14,15 திகதிகளில் கந்தளாய் அகில ரெஸ்ட்ரூரண்டில் நடாத்தியது. 

கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் இச் செயலமர்வு நடைபெற்றது. 

மக்களுக்கும், பொலிஸூக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி சிறந்த சேவையினை மக்களுக்கு பொலிஸினுடாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

த ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தீபளால் கமகே உட்பட ரெக்டோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்,கள இணைப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான், தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -