சாநவாஸ்-
அக்கரைப்பற்றில் அதாஉல்லாவினதும், அக்கரைப்பற்று முதல்வராக இருந்த அதாஉல்லாஹ் சக்கியினதும் படங்களால் சூழப்பட்டிருந்த அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தில் இன்று இந்துக்களின் கடவுளான வினாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட சுலோககங்கள் கட்டப்பட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டுக் காட்சியளிப்பதனைப் பார்த்து அக்கரைப்பற்றின் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று இன்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் மூவினங்களும் ஒற்றுமையாய் வாழும் அக்கரைப்பற்றில் இம்முறை அரசியல் அதிகாரம் இல்லாத நிலமையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மீண்டும் ஒருவருடத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதாஉல்லாவின் இடத்தை நிறப்ப யாராலும் முடியாது என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றை நாங்கள் கைப்பற்றுவோம் என்போர் முடிந்தால் மாநகரசபையையும், பிரதேச சபையையும் கைப்பற்ற வேண்டும். ஆனால் அதாஉல்லாஹ் இருக்கும்வரை அது ஒருபோதும் முடியாத காரியமாகும்.
ஆதலால் அதாஉல்லாஹ்வை சோர்வடையச் செய்யலாம் என்ற நோக்கில் அவரின் எதிராளிகள் செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அதாஉல்லாவின் அரசியலுக்கு பசளைபோட்டு வளர்ப்பதாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. எனவே அதாஉல்லா மீண்டும் உயிர்பெற்று எழுந்து வரும் காலம் வெகுதூரம் இல்லை அதுவரை எதிராளிகள் ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம் என்று அதாஉல்லா இடைவளி கொடுத்துள்ளார் என்று அவரின் ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.