எம்.ஜே.எம். முஜாஹித்-
சுத்தம் சுகம் தரும்' நாம் வாழும் பிரதேசத்தினை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான சிறந்தொரு சமூதாயத்தை உருவாக்க முடியும்.
அதனடிப்படையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் தலைமையில் இன்று திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினை சிரமதானம் செய்யும் பணி நடைபெற்றது.
இதன் மூலம் அப்பிரதேசத்தில் காணப்படும் குப்பைகளை துப்பரவு செய்ததுடன் அங்கு காணப்படும் பிலாஸ்ரிக், இறப்பர் பொருட்கள், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் இல்லாதொழித்தனர்.
இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.





