உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் சிநேகபுர்வ உறவுகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதைபந்தாட்ட சமர் எதிர்வரும் 2015-09-30ம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உதைபந்தாட்ட அணியினருக்கும், அக்கரைப்பற்று மாநகர சபை உதைபந்தாட்ட அணியினருக்குமிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சமராக இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் றகுமான் ஆகியோர் விசேட விருந்தினர்களாக வருகை தரவிருக்கின்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரா்கள் பலர் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
அதிகமான அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட ரசிகர்கள் இப்போட்டி நிகழ்ச்சியை கண்டுகழிக்க வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகி்னறது.