கல்முனை- சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம்..!

எல்.அப்துல் அஸீஸ்​-
ர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விழிபூட்டலும், கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் இன்று (22) கல்முனை கடற்கரைப்பிரதேசத்தில் இடம்பெற்றது.

'அழகிய கடற்கரைப்பிரதேசத்தை சுத்தமாக பேனுவோம்' என்ற தலைப்பில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமத் கனி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேசசெலக உத்தியோகத்தர்கள், பதுகாப்புப்படையினர், கிராம மக்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மாநகர சபை ஊ ழியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருதில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தின நிகழ்வு

ஹாசிப் யாஸீன்-

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தின் அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (22) சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், அம்பாறை மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.சிவகுமார், கரையோர பேணல் திணைக்கள ஒருங்கிணைப்பாளர் எம்.சமீர பெரேரா, மேஜர் சென்ரல் பீ.எம்.ஆர்.பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சம்சுதீன், திவிநெகும தலைப்பீட முகாhமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கரையோர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சுத்தம் செய்வதற்கான
உபகரணங்களும் வழங்கப்பட்டு கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்படுகின்றது என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் இதன்போது தெரிவித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -