யு.எல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் தரத்தை மேம்படுத்தவும், தேசிய ரீதியீல் தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் விளையாட்டுக் கழகங்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்.


