குளவிகொட்டியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு..!

ஏ.எம்.றிகாஸ்-

ஏறாவூர் - சவுக்கடி கரையோர பிரதேசத்தில் குளவிகொட்டியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் 10.09.2015 உயிரிழந்துள்ளார். 

ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சா.தர வகுப்பில் கல்விகற்றுவந்த சவுக்கடி பிரதேசத்தைச் சேர்ந்த தர்மபாலன் எனோஜினி என்பவரே குளவி கொட்டியதில் உயிரிழந்தவர். 

பாடசாலைவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டிற்குச் செல்லும்போது பாதையோர பனை மரத்தில் கூடுகட்டியிருந்த குளவிகள் இவரைக் கொட்டியுள்ளன. இதையடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவேளை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவரது உடல்முழுக்க காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -