அப்துர்ரஹ்மான் பரீத் -
திருமதி நிஹாரா ஆலிப் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 12ம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் அல்-ஹாஜ் பஹார்தீன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுக்கு புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கலந்து கொள்கிறார்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக சி.எம்.இக்பால் (கொழும்பு மாநகர சபை உறுப்பினர்), ஜயன்த விக்ரம நாயக்க – வலயக் கல்விப்பணிப்பாளர்- பொழும்பு, ஐ.எல்.எம் இன்சார்- பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஏ.பி.டி.எம். அலவி உதவிக்கல்விப் பணிப்பாளர், எம்.யூ.செய்யத் முஹம்மத் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் புரவலர் ஹாஸிம் உமர் மூன்று நூல்களின் முதற் பிரதிகளையும் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
