இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரினால் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீடினை கட்சியில் இருந்து தற்காலியமாக நீக்கியமை தொடர்பாக இன்று மாலை வை.எல்.எஸ் ஹமீட் ஊடகங்களுக்கு கருத்து தெரித்தார்.
என்னை கட்சியின் இருந்து நீக்கியமை தொடர்பாக எனக்கு இன்னும் எவ்விதமான கடிதங்களோ தகவல்களோ கிடைக்கவில்லை. நான் அவ்வாறான ஒரு அறிவித்தலை ஊடகங்கள் மூலம் தான் பார்த்தான் என்று ம் அவர் தெரிவித்தார் .
தலைவரை செயலாளர் நாயகமும், செயலாளர் நாயகத்தை தலைவரும் யாப்பின் பிரகாரம் இடை நிறுத்துவது செல்லுபடியாகாது என்றும் அவர் தெரிவித்தார்.