பிரதமர் ரணில் தலைமையில் ஐ.தே.கட்சியின் விசேட கூட்டம் இன்று..!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை கூடவுள்ள 8 வது நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் தேசிய அரசாங்கம் என்ற வகையில் எதிர்காலத்தில் செயற்படும் விதம், கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை கரு ஜயசூரியவை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -