ஜனாதிபதியுடன் முரண்படாத ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும் - ரணில்

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்படாத ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் அரசாங்க பலத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாட்டை செய்ய கூடியவர், ஜனாதிபதியுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்பவராக இருக்க முடியாது.

என்னுடன் இணைந்து செயற்பட சர்வதேச சமூகம் இணங்கியுள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வெளிநாட்டு கடன் உதவி, வெளிநாட்டு முதலீடு மற்றும் வர்த்தக வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -