பிரதமரை தீர்மானிக்கும் சக்தி நாமே!

நடைபெற இருக்கின்ற நடாளுமன்றத் தேர்தல் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக நோக்கப்பட வேண்டியூள்ளது. ஏனெனில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்p செய்து வரக்கூடிய இரு பேரினவாதக் கட்ச்சிகளும் வரலாறு நெடுகிலும் சந்தர்ப்பம் பார்த்து முஸ்லீம்களுக்குத் துரோகம் செய்தே வந்திருக்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே தொடர்ந்தும் அந்தத் துரோகிகளுக்கே எமது வாக்குகளைத் தாரவார்த்துக் கொடுத்து விட்டு கைசேதப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் மிகவூம் அவதாணமாகவூம் கவனமாகவூம் இருந்து கொள்வது மிகவூம் அவசியமாகும். 

இன்றைய இந்த சூழ்நிலையில் நம்மில் சுயநலமிகளைத் தவிர வேறு யாரும் பேரினவாதக் கட்சிகளில் போட்டி இடவோ அல்லது அவற்றிற்கு வாக்களிக்கவோ மாட்டான். ஏனெனில் கடந்த பல தசாப்த்தங்களாக நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகள் ஏராளம் ஏராளம்.

எனவே நமது அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று தனித்துப் போட்டீ இடுவதே சாலவூம் பொருத்தமான மிகவூம் ஆரோக்கியமான ஒரு முடிவாக இருக்க முடியூம் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு அவர்களால் ஒன்றுபட முடியாது எனில் நிச்சயமாக அவர்களுக்கு நம்மை அரசியல் ரீதியாக வழி நடாத்தும் தகுதியூம் தகமையூம் இல்லை என்றே அர்த்தமாகும்.

அப்படியாயின் நாடளாவிய ரீதியில் பேரினவாதிகளுக்கு நமது வாக்குகளைத் தாரவாத்துக் கொடுத்து விட்டுத் தொடர்ந்தம் கைசேதப்படுவதை விட நாமனைவரும் ஒன்று சேர்ந்து நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் சுயேற்ச்சையாகவேனும் களமிறங்குவது சாலவூம் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

இவ்வாறு நாம் களமிறங்குவதால் நமக்கு எந்தப் பிரச்சினையூ நஸ்டமும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை அவ்வாறின்றி நாம் பேரினவாதிகளுடன் இணைந்திருப்பதனால் எவ்வித நன்மையூம் நமக்குக் கிடைக்கப் போவதும் இல்லை. 

மாறாக நாமனைவரும் நாடளாவிய ரீதியில் ஒன்று பட்டு ஒரே அணியாகப் போட்டி இட்டால் நிச்சயமாக இந்த நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சக்தி நாமேயாவோம் 

இவ்வாறான ஒரு தீர்மானகரமான நேரத்தில் நாம் கடச்சி மற்றும் இயக்கப் பேதங்களையூம் குரோத மாணப்பாண்மையையூம் கை விட்டு விட்டு நம் சமூகத்திற்க்காக ஓன்றுபடுதல் மிகவூம் அவசரமும் அவசியமும் ஆகும்.

முனாப் நுபார்தீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -