முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (01) மெதமுலனவில் வைத்து ஆற்றிய உரையை இணைய வலையமைப்புகள் ஊடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெதமுலன மற்றும் அதைனை அண்டிய பிரதேசங்களில் அனைத்து தொடலைத் தொடர்பு நிறுவனங்களினதும் இணையச் (இன்டர்நெட்) செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திட்டமிட்டபடி இணைய வலையமைப்புகளின் ஊடாக அவரது உரையை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடியாத நிலை தோன்றியதாக கூறப்படுகிறது.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியூஸ்