“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டது போல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றறேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட விரும்புவதாகவும், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளதெனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படா விட்டால், தான் வேறு கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.