மருதமுனையில் விபத்து!

அபூ-இன்ஷாப்-

ன்று (02) வியாழன் மாலை மருதமுனை பிரதான வீதி முஸாதிக் டெக்ஸ்டைல்ஸ் முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் சம்மாந்துறையினைச் சேர்ந்த ஒருவர் பலத்த காயங்களுடன் அதாவது கால் முறிந்த நிலையில் மருதமுனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

மருதமுனையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டியும், சம்மாந்துறையிலிருந்து மருதமுனைக்கு வந்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதனாலே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதே சமயம் சம்மாந்துறையிலிருந்து வந்த முச்சக்கர வண்டியில் வருகைதந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற போது அயலில் நின்றவர்களினாலே முச்சக்கர வண்டி நிமிர்த்தப்பட்டு வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்மாந்தறையிலிருந்து பொருநாள் ஆடைக் கொள்வனவிற்காக மருதமுனைக்கு வந்த வேளையிலே இவ் விபத்து நிகழ்ந்துள்ளன.

இவ்விபத்தச் சம்பவம் நடைபெற்றவுடன் கல்முனைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் ஓரிரு மணித்தியாலங்களின் பின்பே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -