பதுளை ஸ்ரீ சண்முகாநந்தா தமிழ் வித்தியாலயத்தில் தேசிய மது ஒழிப்பு தின நிகழ்வு!

எஸ்.சிவகாந்தன்-
தேசிய மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்திற்குட்பட்ட 103 பாடசாலைகளில் இன்றைய தினத்தில் பல்வேறுப்பட்ட அறிவுறுத்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றன . 

அதனையொட்டி பதுளை பகுதியின் டிக்வெல்ல , ஸ்ரீ சண்முகாநந்தா தமிழ் வித்தியாலயத்தில் 28/07/2015 இன்றைய தினம் மதுஒழிப்பு சம்மந்தமான விழிர்புணர்வு பிரசார நிகழ்வொன்று, பாடசாலை அதிபர் கே.பரணிதரன், தலைமையில் இடம்பெற்றது.

பிரதி அதிபர் ஏ.மகேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிழ்வில் சிறப்பு அதிதியாக பதுளை பொலிஸ் அதிகாரி அண்ணாதுரை உட்பட, ஆசியர்கள் மாணவர்கள் பங்குபற்றலுடன் , நடைமுறையிலுள்ள போதைப்பொருள் பாவனையில் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுருத்தப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -