தமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியாகிரக போராட்டம் நிறைவு.!

க.கிஷாந்தன்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதுபோல 1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் 08.07.2015 அன்று காலை 10.30 மணிக்கு தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுத்தனர்.

அப்போராட்டம் நண்பகல் 1 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது. 

இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -