பாரா­ளு­மன்ற அமர்வின் போது தனது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்டிய பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினரால் சர்ச்சை

பாரா­ளு­மன்ற அமர்வின் போது தனது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்டி பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கடும் சர்ச்­சைக்­குள்­ளான சம்பவம் ஆர்­ஜென்­டீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

விக்­டோ­ரியா டொன்டா பெரெஸ் (37 வயது) என்ற மேற்­படி பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புவனொஸ் அயர்ஸ் நக­ரி­லுள்ள பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்தில் இடம்­பெற்ற கூட்­டத் தின் போது தனது 8 மாத பெண் குழந்­தைக்கு பாலூட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில் இது தொடர்­பான புகைப்­ப­டங்கள் ஊட­கங்­களில் வெளி­யா­ன­தை­ய­டுத்து கடும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான விக்­டோ­ரியா 2007 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வானார். இதன் மூலம் ஆர்­ஜென்­டீன பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வான மிகவும் வயது குறைந்த பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பெயரை அவர் பெற்றார்.

அது முதற்­கொண்டு கவர்ச்­சி­க­ர­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அவர் செல்­ல­மாக அழைக்­கப்­பட்டு வருகிறார்.இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் அவர் தனது குழந்­தைக்குப் பாலூட்ட எடுத்த தீர்­மானம் குறித்து ஆத­ரவா கவும் எதி­ரா­கவும் விமர்­ச­னங்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அவர் பாரா­ளு­மன்­றத்தில் கட­மை­யி­லி­ருந்த போது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்­டி­யமை தவ­றான செயல் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட பலர் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

அவர் தனது கட­மையின் மத்­தி­யிலும் ஒரு குழந்­தைக்கு தாய் என்ற ரீதியில் தனது கட­மையை செவ்­வனே நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்கும் அவ­ரது ஆதரவாளர்கள், எனினும் அவர் தனது குழந்தைக்குப் பாலூட்டும்போது தனது உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடையால் மூடி பாலூட்டியிருக்க லாம் என விமர்சித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -