தேர்தல் தொடர்பான மஹிந்தவின் இறுதி முடிவு இன்று 4 மணிக்கு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில் இன்று (03) மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. 

இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.  நாராஹென்பிட்டி அபயராமவில் இடம்பெறவுள்ள ஊடக சந்திப்பில் எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலா அல்லது வேறு கட்சியிலா என்று இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இறுதி முடிவினை இம்போட் மிரர் வாசகர்களுக்காகவும் பிற்பகல் பிரசுரிக்கவுள்ளோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -