அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டம் இன்று (26.07.2015) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கட்சியின் வேட்பாளர்கள், பிரமுகர்கள் உரையாற்றி முடிந்ததும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில் கூட்டமேடையை நோக்கி சுமார் பி.ப 11.20 மணியளவில் கற்கள் வீசப்பட்டன. ஆனால் யாருக்கும் பாதிப்பின்றி அமைச்சர் ரிஷாத்துக்கு முன் வீசப்பட்ட கற்கள் விழுந்ததாக இம்போட்மிரர் இணையத்தள செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அமைச்சர் ரிஷாத் ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தி முடித்து கூட்டம் 11.40 மணியளவில் நிறைவுற்றது.

