வயிறுடன் இதயமும் சுத்தமாகும் ரமலான் நோன்பு

முஹம்மது சப்றீன்-

மலான் நோன்பு
வயிறுடன் இதயமும்
சுத்தமாகின்றது
ரமலான் நோன்பு
...................................................
ஆழ்மன நிசப்தங்களை
கிழித்துச் செல்கின்றன
வைகறையின்
பக்கிர் பாடல்கள் .....
.................................................
பசித்திரு
விழித்திரு
துதித்திரு ...
நோன்பு தத்துவங்கள் ....
...........................................
வைகறைக்குமுன்
ஈரமான நெஞ்சுக்குழிகள்
அஸ்தமம் வரை
ஈகைகளால் மட்டுமே
தன்னை
ஈரமாக்கி கொள்கின்றன .....
............................................................................
அந்தி பொழுதுகளில்
வறண்ட நாவிற்கருகில்
மிளிரும் உணவு கடந்து
பாவ மீட்சிக்காய்
துடிக்கும் உதடுகள்
கண்ணீரில் குளிக்கும்
விழிகள் .....
...........................................................................
திருமறை வரிகளையே
சுவைக்கும் விழிகள் ...
விருந்துகளாய் தான்
விழிகளின் நோன்புகள்
.............................................................
மசூதி புறாக்கள்
கணக்கிட்டு கொண்டிருக்குமோ
பள்ளியை நிறைக்கும்
மானுட கூட்டத்தை ....?
......................................................................
ஏழைகளை தேடியபடியே ....
இரண்டரை விழுக்காடு
செல்வம்
கட்டளையாகிய
கட்டாய ஈகை
...............................................................
தலைவாசல் மாடத்தில்
நிறைந்த சில்லறைகள்
காத்துக் கொண்டிருக்கின்றன
யாசிப்பு கரங்களுக்காய் ....
..................................................................
ஈகை தொழுகையின்
இறுதிநாட்களில்
கையேந்தும் கரங்களில்
வழங்கிவிட்டு வந்த
ஈகை அரிசியால் ...
வேண்டுதல்கள் ...
....................................................................
இப்படியே நகராதா ...
ஏனைய நாட்களும்
என்றே ...
கதறுகின்றன...
ஆயுள்கள் ...
ரமலானின் பிரிவுகளில் .......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -