ஏஎம் றிகாஸ்-
ஏறாவூர் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியிலிருந்து தங்க மாலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாலை முகாமையாளர் எம்எஸ்.அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
இந்த மாலையின் உரிமையாளர் ஏறாவூர் போக்குவரத்துச் சாலைக்கு வருகைதந்து அந்த மாலையின் அடையாளத்தை உறுதிப்படுத்தி மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு- வாழைச்சேனை குறுந்தூர சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டியிலிருந்து இந்த மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த மாலையினை கண்டெடுத்து சாலையில் ஒப்படைத்த அந்த பஸ் நடாத்துனரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.(ந)
