பொத்துவில் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிப் பாவனையை தடை செய்ய வேண்டும் என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை சிலர் உண்மைக்கு புறம்பாக திரிபுபடுத்தும் வகையில் பேஸ்புக்கிலும், பொத்துவில் பிரதேசத்திலும் பல்வேறுபட்ட விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்னவெனில் தலைப்பு அவ்வாறு அமைந்த போதிலும் செய்தியின் உள்ளடக்கம் தொழுகையில் ஒலிபெருக்கிப்பாவனையை மட்டுப்படுத்தக் கோருவதாகவே அச்செய்தி அமைந்திருந்தது.
எந்தவொரு இடத்திலும் பாங்கை தடை செய்ய வேண்டும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட வில்லை.
இதை தவறான கண்னோட்டத்தில் பார்ப்பவர்கள் தயவு செய்து தமது கருத்தை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்வதுடன், தெளிவு பெற விரும்புபவர்கள் பொத்துவில் ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதியை வாசிக்குமாறும் வேண்டுகின்றோம்.
