பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி ஸ்தாபனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ ஆலோசனைச்சேவை இன்று (02-06-2015) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்முனை பிராந்திய தாய்,சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் ஏம்.ஏ.சீஎம்.பஸால்,மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் யுரேக்கா விக்கிரம சிங்க,கண்சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.றிஸாட் ஆகியோர் உள்ளீட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு நோயாளர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார்கள்.


