திருகோணமலை:காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று இரண்டாவது நாளாகவும் திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான விசாரணைகளையும்,புதிய முறைப்பாடுகளையும் மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து பதிவு செய்து வரும் நிலையில் இரண்டாவது நாளாகவும் திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசே இடைக்கால அறிக்கையை வெளயீடு,கண்துடைப்பு ஆணைக்குழு வேண்டாம்,காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகளுக்கு என்ன நிலை,எம் பிள்ளைகள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்றாவது சொல்லுங்கள், போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இறுதி நாளான இன்று; திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் 241 பேருக்கு காணாமல் போனோரை விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுககப்பட்டதாக ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -