ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தம்பலகாமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அமைப்பாளருமானஉள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (17)முள்ளிப்பொத்தானயில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தம்பலகாமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவராகசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான ஜனாப்.எம்.எஸ்.அய்யூப்கான்,செயலாளராக எம்.என்.சபியுள்ளாவும் உறுப்பினர்ளாக 25 பேரும்ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் முன்னால் ஹாதி நீதிபதி எம். அப்துல் ஜப்பார் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


