எம்.வை.அமீர்-
கிழக்குமாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவரும் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாக, வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் அபிவிருத்தி நிதியில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் இருக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சுமார் பத்து லட்சம் ரூபாய்கள் செலவில் ஒரு சோடி டயர்கள் வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு2015-06-28 ல் கொம்டெக் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கிவைப்பு நிகழ்வு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுடைய பிரத்தியோக செயலாளர் சீ.எம்.ஏ.முனாஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் அதிதியாக கலந்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்களை வழங்கிவைத்தார். கௌரவ அதிதிகளாக மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் எம்.ஐ.எம்.பாஸி, இணைப்பாளர்களான எஸ்.ஏ.வஹாப், எம்.எஸ்.எம்.றிஸ்தி மற்றும் ஏ.ஆர்.எம்.பசில் உள்ளிட்டோர் கலந்து சாரதிகளுக்கு டயர்களை வழங்கி வைத்தனர்.
நிகழ்வுக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருந்தபோதிலும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவரினால் கலந்து கொள்ள முடியவில்லை.
அம்பாறை மாவட்ட வரலாற்றில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறன் உதவிகள் வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த 194 முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஒரு சோடி டயர்கள் வீதம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.