இன்பாஸ் சலாஹூதீன்-
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் நலன்புரி அமைப்பு வருடா வருடம் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பொலிஸ் திணைக்கள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் இளங்க கோன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டார். நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியூதின் , இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி.
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மற்றும் பராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், முத்தலிப் பாவா பாறூக், பைசர் முஸ்தபா,மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே எம் முசம்மில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், வெளசாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள்,நீதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராத் மற்றும் மார்க்க சொற்பொலிவு நடத்தியவர்களுக்கு பொலிஸ் மா அதிபர் நினைவுச் சின்னம்
வழங்கினார்.
அத்துடன் பொலிஸ் திணைக்களம் நடத்திய வருடந்த இப்பதார் தொடர்பான இறுவட்டு ஒன்றும் அதிதிகளுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கினார்.பொலிஸ் செவையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.