பெலவத்தை 'அபேகம' வளாகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வொஷ் என்ற தொனிப்பொருளிலான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுகாதாரம் தொடர்பான தெற்காசிய மாணவர் மாநாட்டின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (17) மாலை வெற்றிகரமாக நிறைவடைந்தது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அகில விராஜ் காரியவசம், பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோரும், அதிதிகளும் இரண்டாம் நாள் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மற்றும் சார்க் நாடுகளின் மாணவர்களுக்கு அமைச்சர் ஹக்கீம் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.



