நேற்று 07.06.2015 ஆம் திகதி காலை10.00 மணிக்கு மூதூர் ரவ்ளத்துள் ஜன்னாஹ் அரபிக் கல்லூரியின் புனித அல் குரானை மனனம் செய்த காபில்கள் சுமார் 23 பேருக்கு பாராட்டி கொளரவிக்கபட்டதுடன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வோடு புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது
குறித்த அரபிக் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அசேக் அப்துல்ஹசன் மதனி கண்ணியத்துக்குரிய உலமாபெருந்தகைகள் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் லாகிர் இம்ரான் மக்ரூப் போன்ற அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.






