மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மடட்க்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று ஆரையம்பதி பகுதியில் வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
விபத்து தொடர்பில் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
