தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில், பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே தடையாக இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
மேலும் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த போது, அதற்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குபற்றி இருக்கவில்லை என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.ச