ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலாரத்ன தேரருடன் கூட்டணியை ஏற்படுத்த இணங்கியிருப்பதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீலாரத்ன தேரரும், சோமவன்ஸ அமரசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பான சீலாரத்ன தேரர் முன்வைத்த யோசனைக்கு அமரசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சீலாரத்ன தேரர் இதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ச