தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு!

ஹாசிப் யாஸீன்-
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கான முறைப்பாட்டுப் பெட்டியினை வழங்கி வைத்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், உளவளத் துணை உத்தியோகத்தர் ரீ.எம்.எம்.ஹப்றத் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பிரிவிலுள்ள 9 பாடசாலைகளுக்கு இம்முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -