தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சிலுவையில் தொங்கிய பெண் - படங்கள்

மெக்சிகோவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பெண் வேட்பாளர் ஒருவர் சிலுவையில் தொங்கி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ரஃபேலா ஒரோஸ்கோ ரொமோ எனும் பெண் வேட்பாளர், மெக்சிகோவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தில் செலவீனம் தொடர்பான தகவல்கள் இல்லை எனவும் போதிய ஆதரவுக் கையொப்பங்கள் இல்லை என்ற காரணத்தாலும் அவரை தேர்தலில் போட்டியிட மெக்சிகோவின் தேர்தல்கள் ஆணையகம் அனுமதிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேர்தல்கள் ஆணையகம் முன்பாக
ரஃபேலா ஒரோஸ்கோ ரொமோ தன்னைத்தானே சிலுவையில் சேர்த்துக்கட்டி 2 மணித்தியாலங்கள் வரை சிலுவையில் தொங்கியுள்ளார்.

இவரது ஆதரவாளர்கள் சிலரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளது.ச



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -