ஏழை மக்களின் நாயகன் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச- ஜனாதிபதி

அஷ்ரப் ஏ சமத்-
ழை மக்களின் நாயகனாக வாழ்ந்து அந்த மக்களுக்காகவே தண்னைன அர்ப்பணித்த ஒரு தலைவர் தான் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச. இந்த வைபவத்திற்கு நான் வந்ததையிட்டு திருமதி கேமா பிரேமதாசா அவர்கள் ' பிரேமதாசா மறைந்து கடந்த 22 வருடங்களுக்குள் இம்முறைதான் அவரின் ஒரு நினைவு தினத்திற்காக ஒரு நாட்டின் ஜனாதிபதி பிரதம அதிதியாக வந்த பெருமை என்னையே சாரும் எனக் கூறினார். அதனையிட்டு நானும் மிகவும் சந்தோசமடைகின்றேன்.

மேற்கண்டவாறு மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 22 நினைவுதின வைபவத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். இந் நிகழ்வில் பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

நான் பொலநருவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் முதன் முதலில்1989ஆம் வந்தபோது மறைந்த ரணசிங்க பிரேமதாச அவர்களே அப்பொழுது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக பதவிவகித்திருந்தார். அத்தருனத்தில் அவர் சகல கட்சி பாரளுமன்ற உறுப்பிணர்களையும் அழைத்து சகலருக்கும் தத்தமது மாவட்டத்தில் அபிவிருத்திக்காக வருடாந்தம் 25 இலட்சம் ருபாவை ஒதுக்கித்தந்தார். அவர் வீடமைப்பு மற்றும் ஜனசவிய போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார். அவரின் புதல்வர் சஜித் பிரேமதாசாவும் அவரின் அடிச்சுவட்டை பின்தொடாந்து வரும் ஒர் இளம் அரசியல்வாதி. 

அவரும் ஏழை மக்களின் ஒரு சிறந்த சேவையாளர். இந்த நாட்டின் ஏழைமக்களின் துயர் துடைப்பதற்கே அவருக்கு வீடமைப்பும் சமுர்த்தி அமைச்சினை பிரதமர் ரணிலுடன் கலந்துரையாடி வழங்கினோம் .

ஜனாதிபதி ஆர் பிரேமதாசா அவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர். எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றினார்.

இந் நிகழ்வின்போது ஜனாதிபதி பிரதமந்திரி ரணில் விக்கிரம சிங்க மற்றும் ஹேமா பிரேமதாச துலாஞ்சலி ஜயக்கொடி, சஜித் பிரேமதாச கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் ஆகியோறும் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பூச்சொன்று வைத்து ஆசீர்வதித்தனர்.

இவ்வைபவத்தினபோது ; பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு மாவட்டத்தில் மிண்சார அற்ற 37 குடும்பங்களுக்கு 'சோல் பவர்' இயந்திரங்கள், மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் 100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்திட்டம், வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் சுயதொழில் கடன்கள் போன்றவைகளும் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கி வைக்பப்ட்டது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -