விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது சிறுவர்கள் பாலியல் வல்லுறவு!

பெங்களூர் புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பள்ளி சிறுவர்கள் சிலர் சிறுமியை பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். 

இதற்கிடையே தன்னுடன் விளையாடிய சிறுமி திடீரென்று காணாமல் போனதால் அவளது சகோதரன் அந்தப்பகுதியில் தேடினான். அப்போது பள்ளிச் சிறுவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து ஓடிச் சென்று தனது தாத்தா பாட்டியிடம் தெரிவித்தான். 

உடனே அவர்கள் வந்து சிறுமியை மீட்டனர். இதுபற்றி பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. 

பெங்களூர் புறநகர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சிறுவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

பொலிஸ் தேடுதல் வேட்டையில் ஒருவன் சிக்கினான். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -