சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது!

ள்ளூராட்சி மன்றமானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கோசமாக இருந்து வருகிறது. இதனை பல வழிகளில் சாய்ந்தமருது மக்கள் பெற முயற்சித்து வருகின்ற போதும் மு.கா இன்றி யாரினாலும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இதனை சாய்ந்தமருது மக்களும் அறிந்து தங்கள் முயற்சிகளினை எடுப்பதே அறிவுடமையாகும்.இக் கோசம் போன்றே சாய்ந்தமருதிற்கென்ற ஒரு பிரதேச செயலகத்தினை அமைக்கக் கோரி பல வழிகளிலும்முயற்சி செய்தார்கள். இறுதியில் மு.கா தான் பெற்றுக் கொடுத்தது.

சில சில்லறை அரசியல்வாதிகள் ஓரிரு தையல் இயந்திரங்களினைப் கொடுத்து விட்டு சாய்ந்தமருது மக்களின் வாக்குகளினை குறி வைக்கின்றார்கள். இதனை சாய்ந்தமருது மக்கள் நன்கு அறிந்து கொண்டு எதிர்வரும் தேர்தல்களிலே செயற்பட வேண்டும். முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இன்று உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் நாளை உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்று சாய்ந்தமருது மக்களினை தன் வசப்படுத்த முயன்றார். உள்ளூராட்சி அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ்வின் கரங்களினை பற்றிப் பிடித்திருந்த காலத்திலேயே இவரினால் இதனை பெற்றுக் கொள்ள முடியாது என்றால் இவரினால் இக் கோரிக்கை சாத்தியமானதா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -