துறைமுக நகர திட்டத்தில் ஊழல் மோசடி இல்லை என சிலர் கூறுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துறைமுக நகர திட்டத்தில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறியவர்களே, இப்போது இன்று இல்லை என்று கூறுகின்றார்கள்.
ஏதோ ஒன்றை நிர்மாணிப்பதற்காக செங்கல் ஒன்றை முத்தமிட்டு கொண்டு செல்வது போன்றே இந்த அரசாங்கம் செய்து வருகிறது. கடனுக்கு பொருட்கள் பெற்றுக்கொண்டதற்காக எங்களில் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளார்கள்.
நான்கு மாதங்கள் நாங்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு நகரம் குப்பை தொட்டியாகி விட்டது.
பழிவாங்குவதற்காகவே 24 மணித்தியாலங்களையும் பயன்படுத்துகின்றார்கள் அவர்களுக்கு ஏனையவைகளை செய்ய நேரம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நாட்டு பெண்களுக்கு தெரியும் அவர்களுக்காக யார் செயற்பட்டது, யார் வேலை பெற்றுக்கொடுத்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ச