பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பசில் மற்றும் மேலும் 3 பேரையும் இம் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
திவிநெகும நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் தண்டனை பெற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் நோயாளர் காவு வாகனத்தின் மூலமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். -hiru-
Sa
