அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொதுபலசேனா அமைப்பிற்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பொதுபலசேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே, நாளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியை பதிவு செய்வது தொடர்பில் கால தாமதங்கள் ஏற்படலாம்.எனினும் கட்சியின் செயற்பாடுகளை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.
எது எவ்வாறு இருப்பினும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட நாட்டில் உள்ள பல தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அவர்கள் யாரென்பது குறித்து தற்போதைக்கு ஊடகங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். sa
