20வது திருத்த அமைச்சரவை உப குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயவென அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று மாலை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது. 

சிறுகட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அதனை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் அமைச்சரவை உப குழுவின் தவிசாளர், அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 

அதன்படி, ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை இறுதி முடிவினை எடுத்து பாராளுமன்றில் தேர்தல் திருத்தச் சட்டமூலம் சமர்பிக்கப்படும். 

இதேவேளை, இம்மாத இறுதியில் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -