எம்.ஜே.எம். முஜாஹித்-
எமது பொலிஸ் உத்தியோகத்தரினுடைய பிள்ளைகள் தங்களது அறிவு விரித்தியில் மாத்திரம் நின்று விடாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே எமது சமூகத்தில் நட்பிரஜைகளை உருவாக்க முடியும் என அம்பாறை, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சி.என். வாகிஸ்டர் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டினையிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.எல்.எம். ஜெமில் தலைமையில் அக்கரைப்பற்று பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.கே.வி. மஹேந்திர, அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர் ஜி.கே.டி. ஹெமந்த, கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)