பொது தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள்- ஜனாதிபதி

திர்வரும் பொது தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். பொலன்னறுவையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தனது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனது பிள்ளைகள், சகோதரர்களை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என உறுதி செய்துள்ளதுடன், தமது குடும்பத்தினரை அரசியலில் இருந்து வெளியே வைத்து தான் உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக செய்ற்படவுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் அரசியல் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -