விளையாட்டுக்குள் அரசியல் இருக்கக் கூடாது!

விளையாட்டுக்குள் ஊழல் மற்றும் அரசியல் இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பில், நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

டீ.திஸாநாயக்க தலைவராக உள்ள இந்தக் குழுவில் என்.பத்மநாதன் மற்றும் ரெஸ்லி குஷேன் ஆகியோர் அடங்குகின்றனர். 

குறித்த குழுவால் அமைச்சில் இடம்பெற்ற 18 மோசடிகள் குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -